Tuesday, June 28, 2005

வேராய் விருட்சமாய் நீ .....

விழிகள் மூடி
ஒளியின் தரிசனம் ! - என்
கனவுப்புள்ளிகளின் இணைப்பில் - உன்
நினைவலைகள்
நீங்காமலே என்னோடு
நிழலாய் !

உன்
முகம் மறக்கவே
என்
அகம் மறைத்தேன் !
எனை அறியாமலே - என்னுள்
உனை விதைத்தேன்.
விருட்சமாய் வளர்ந்தாய்
வேர் பெருக்கி - என்
நெஞ்சம் பிளந்தாய் - இருந்தும்
பொறுத்தேன் - ஒருபோதும்
வேரறுக்கேன் - என்
உயிரின் உயிரல்லவா நீ !


ஆக்கம்
........இ.ஜேசுராஜ்.

தாய்

நானும் அவளும் ஓருயிர் ஓருடல் - ஆம்
நஞ்சுக்கொடி அறுபடுமுன்னே நானும் தாயும் !


ஆக்கம்
.......இ.ஜேசுராஜ்

நான் வேண்டும் வரம் .......

மேகமென் முகம் வருட
புல்லின் நுனி அள்ளிய பனித்துளி - என்
பாதம் கழுவிட வேண்டும் !

துளிர்க்கும் பசுமைக்குள் - என்
சுமை புதைக்க வேன்டும் !

ஆதவன் எழுமுன்
ஆழ்துயில் கலைந்தபின்
துள்ளல் உள்ளத்தில் வேண்டும் !

ஆழிசூழ் உலகம் அமைதிப்பன் பாடவேண்டும் !